Tuesday, September 21, 2010



மின்னலை பார்த்தால்
பார்வை பறிபோகுமென
யார் சொன்னது ..?
இதயமல்லவா பறிபோனது
உன்னை பார்த்ததும்..

யாரையாவது காதலிக்கிறாயா
என நண்பர்கள் கேட்டபோது
உன் பெயர் சொல்லாமல்
இல்லையென்று
நான் பொய் சொன்னதற்காய்
கோபம் கொள்கிறாய்..
நீயே சொல்
ஒரு குழந்தையை காதலிப்பதை
யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?

உலகம் தன்னை தானே
சுற்றிகொண்டிருக்கிறது..
ஒருவேளை
அது உன்னை பார்த்திருந்தால்
உன்னை தானே சுற்றி கொண்டிருக்கும்.


வானவில் எப்படி இருக்கும் ?
எதிர் வீட்டு குழந்தை
கேட்ட போது
சட்டென்று காட்டினேன்..
உன் புகைப்படத்தை