Tuesday, January 27, 2009

கூடு கட்டும் பறவைக்கெல்லாம்
மரத்தின் ஆசை புரிவதில்லை
ஊதி ஊதிப் பார்த்த போதும்
பனிப் புகைகள் எரிவதில்லை
தன் மேல் விழுந்த நிலவின் பிம்பம்
தண்ணீருக்குத் தெரிவதில்லை
வெந்நீர் ஊற்றி செடிகள் வளர்ந்தால்
பூக்கும் பூக்கள் சுடுவதில்லை
ஒரு பயணத்தை தொடங்கிட இருந்தேன்
என் பாதைகள் யாவையும்
மாற்றி வைத்தாய்.
வழித் துணையென உன்னுடன் வந்தேன்
நீயோ என் விழிகளை பறித்தாய்.
உன்னோடு பேசிய நாட்கள்
வெறும் கண்ணீரில் கரைவதில்லை
நினைவுகள் மங்கிய போதும்
மனம் கண்ணாடி அணிவதில்லை.

மழை நின்ற மாலை நேரம்
மனம் அங்கு உன்னை தேடும்
உயிர் கொண்டு வாராயோ
வானவில்லே.
உனை காண பின்னே வந்தேன்
குரல் கேட்க தள்ளி நின்றேன்
உனை நீங்கி போவேனா
உன் நிழல் நான்.
உடையாமல் உலாவும் நீயென்
நுரைப் பூவடி
விடியாமல் தவிக்கும் என்னை
கரை சேரடி.
உன் விழி பார்த்து விழாமல் போக
வழி சொல்லடி
எது வரை என் உலகம் ?
பிறக்கும் வரை தாய் - இனி
இறக்கும் வரை நீ.

Tuesday, January 20, 2009

என் சுகங்கள்
சுகமாக
தூங்கிவிட்டன
நான் உன்னை
இழந்த பிறகு .

Saturday, January 10, 2009

யாருமற்ற தேசமொன்றை
தோன்ற செய்கிறாய் .
அதில் நானும் நீயும்
சேர்ந்து வாழ கூடமைக்கிறாய்.
காணுகின்ற காட்சியெல்லாம்
வண்ணமாக்கினாய்
உன் வளையல் கொண்டு ஜன்னல் செய்து
வானம் காட்டினாய்
சின்ன சின்ன மேகங்களுக்குள்
ஆசை புதைக்கிறாய்
அதை என்னை காணும் போது
என் மேல் பொழிய விடுகிறாய்
விடியலற்ற பூமியோன்றில்
வாழ்ந்திருந்தவன் உன்
விடிந்து விட்ட வானம்
கண்டு பரவயாகிறேன்
பாலைவனம் வாழ்வதற்கு
பழகிவிட்ட நான் உன்
பார்வை பட்டு
வாழ்வதற்காய்
காத்திருக்கிறேன்.
சிநேகம் கொண்டு எனதுயிரை
உருகவைக்கிறாய் அதில்
உனது வாழ்வை தினமும்
மெல்ல கரைய விடுகிறாய்.







Wednesday, January 7, 2009

தன் மேல் விழுந்த
மழை துளியை
சொந்தம் என்று சொல்ல வந்த
இலை சொல்வதுற்குள்
வெயில் வந்து உறிஞ்சியது
மழை துளியை .