கூடு கட்டும் பறவைக்கெல்லாம்
மரத்தின் ஆசை புரிவதில்லை
ஊதி ஊதிப் பார்த்த போதும்
பனிப் புகைகள் எரிவதில்லை
தன் மேல் விழுந்த நிலவின் பிம்பம்
தண்ணீருக்குத் தெரிவதில்லை
வெந்நீர் ஊற்றி செடிகள் வளர்ந்தால்
பூக்கும் பூக்கள் சுடுவதில்லை
ஒரு பயணத்தை தொடங்கிட இருந்தேன்
என் பாதைகள் யாவையும்
மாற்றி வைத்தாய்.
வழித் துணையென உன்னுடன் வந்தேன்
நீயோ என் விழிகளை பறித்தாய்.
உன்னோடு பேசிய நாட்கள்
வெறும் கண்ணீரில் கரைவதில்லை
நினைவுகள் மங்கிய போதும்
மனம் கண்ணாடி அணிவதில்லை.
Tuesday, January 27, 2009
Saturday, January 10, 2009
யாருமற்ற தேசமொன்றை
தோன்ற செய்கிறாய் .
அதில் நானும் நீயும்
சேர்ந்து வாழ கூடமைக்கிறாய்.
காணுகின்ற காட்சியெல்லாம்
வண்ணமாக்கினாய்
உன் வளையல் கொண்டு ஜன்னல் செய்து
வானம் காட்டினாய்
சின்ன சின்ன மேகங்களுக்குள்
ஆசை புதைக்கிறாய்
அதை என்னை காணும் போது
என் மேல் பொழிய விடுகிறாய்
விடியலற்ற பூமியோன்றில்
வாழ்ந்திருந்தவன் உன்
விடிந்து விட்ட வானம்
கண்டு பரவயாகிறேன்
பாலைவனம் வாழ்வதற்கு
பழகிவிட்ட நான் உன்
பார்வை பட்டு
வாழ்வதற்காய்
காத்திருக்கிறேன்.
சிநேகம் கொண்டு எனதுயிரை
உருகவைக்கிறாய் அதில்
உனது வாழ்வை தினமும்
மெல்ல கரைய விடுகிறாய்.
தோன்ற செய்கிறாய் .
அதில் நானும் நீயும்
சேர்ந்து வாழ கூடமைக்கிறாய்.
காணுகின்ற காட்சியெல்லாம்
வண்ணமாக்கினாய்
உன் வளையல் கொண்டு ஜன்னல் செய்து
வானம் காட்டினாய்
சின்ன சின்ன மேகங்களுக்குள்
ஆசை புதைக்கிறாய்
அதை என்னை காணும் போது
என் மேல் பொழிய விடுகிறாய்
விடியலற்ற பூமியோன்றில்
வாழ்ந்திருந்தவன் உன்
விடிந்து விட்ட வானம்
கண்டு பரவயாகிறேன்
பாலைவனம் வாழ்வதற்கு
பழகிவிட்ட நான் உன்
பார்வை பட்டு
வாழ்வதற்காய்
காத்திருக்கிறேன்.
சிநேகம் கொண்டு எனதுயிரை
உருகவைக்கிறாய் அதில்
உனது வாழ்வை தினமும்
மெல்ல கரைய விடுகிறாய்.
Subscribe to:
Posts (Atom)

