Thursday, October 6, 2011

மணலா..? மழையா..?
எதுவெனக்கேட்டேன்
மணலென்றால் பிரிவாய்.
மழையென்றால் நனைவாய்..
மணலா..? மழையா..?
எதுவெனக்கேட்டேன்.
மணல் அள்ளி கையில் தந்தாய்
மழையை என் கண்ணில் வைத்தாய்.
புலர்வதால் மலர்வது
பூவுக்கு நிகழ்வது..
நீ பிரிவதால் உலர்வது என்
நெஞ்சுக்கு நிகழ்வது..
நிலவில்லா மேகத்தை
யாரிங்கு ரசிப்பது..?
நீயில்லா தேகத்தை
யாரிங்கு நேசிப்பது..?
மண்ணோடு சேரவே
மழை இங்கு உள்ளது..
உன்னோடு வாழவே
உயிர் இங்கு உள்ளது..
கடல் கொண்ட துளியினை
எங்கே போய் காண்பது..?
என் கண் கொண்ட துளியினை
நீ எப்போது அறிவது..?
உண்ணாமல் வாழ்கிறேன்
உன்னாலே தேய்கிறேன்..
என் கவிதை படித்த வாயினில்
போ என்று சொல்கிறாய்..
தீ வைத்த பாயினில்
எனை தூங்க சொல்கிறாய்..
இன்னும் ஏன் சோதனை..
வாழ்வே முழு வேதனை..





Saturday, August 27, 2011

என் நெஞ்சே ..! வா இங்கே ..!
நீயின்றி உயிரேதிங்கே..?

பார்வை ஒன்று போதும்
எந்தன் ஜீவன் வாழும்.!

உனை சேரும் நாளும் வாராமல்
வாழும் வாழ்க்கை வீணாகும்.!

ஒரு முறை நினைத்ததை
மறந்திட மனதுக்கு
தெரியுமா ? முடியுமா ?
மறுமுறை பிறந்திட
உனை வந்து சேர்ந்திட
எனக்கிங்கு ஆகுமா.?

பிரிவொன்று நிகழ்ந்தபின்
இதயமும் உனக்கென
துடிப்பதை நிறுத்துமா.?
உறவென்று உயிரென்று
நீயிங்கு ஆனபின்
வேறொன்றை மனம் விரும்புமா.?

சாகும் போதேனும் உன் மார்பில்
சாய வேண்டும் வா.. வா..!
வாழும் போது நான் கேட்ட
காதல் அன்றேனும் தா..தா.!

உன்னை வந்து சேராமல்
வாழ்க்கை இங்கு வீண்தானே .!

எனை விட்டு விடை பெற
காதலை மறந்திட
உனக்கிங்கு முடிந்ததேன்.?
உனை விட எனக்கிந்த
உலகமும் பெரிதல்ல
என்பதை மறந்ததேன்.?

பகலென்றும் இரவென்றும்
பாவமென்றும் காதல் என்றும்
பார்ப்பதே இல்லையே .!
பழகிய நினைவுகள்
எனை தினம் இரவினில்
உறங்கவே விடுவதில்லையே.!

தேகம் வேறாகி போனாலும்
ஜீவன் இங்கொன்றுதானே!.!
ஜென்மம் நூறாகி போனாலும்
வாழ்க்கை உன்னோடு தானே..!

நீயும் இங்கு இல்லாத
நாளும் வாழ்வும் வீண் தானே.!


Tuesday, September 21, 2010



மின்னலை பார்த்தால்
பார்வை பறிபோகுமென
யார் சொன்னது ..?
இதயமல்லவா பறிபோனது
உன்னை பார்த்ததும்..

யாரையாவது காதலிக்கிறாயா
என நண்பர்கள் கேட்டபோது
உன் பெயர் சொல்லாமல்
இல்லையென்று
நான் பொய் சொன்னதற்காய்
கோபம் கொள்கிறாய்..
நீயே சொல்
ஒரு குழந்தையை காதலிப்பதை
யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்?

உலகம் தன்னை தானே
சுற்றிகொண்டிருக்கிறது..
ஒருவேளை
அது உன்னை பார்த்திருந்தால்
உன்னை தானே சுற்றி கொண்டிருக்கும்.


வானவில் எப்படி இருக்கும் ?
எதிர் வீட்டு குழந்தை
கேட்ட போது
சட்டென்று காட்டினேன்..
உன் புகைப்படத்தை




Monday, August 30, 2010



காதல் பெருமழையில்
தொட்டங்குச்சிக் குடை
நீட்டுகிறாய்...
பார்வையால் நெருப்பை மூட்டி
பனித்துளி வார்த்தைகளை
காதுக்குள் ஊற்றுகிறாய்..
தேகத்தை தெருவில் விட்டு
உயிரை மேகத்தில்
மிதக்க விடுகிறாய்..
என்னை வரசொல்லிவிட்டு
நீ வரமறுக்கிறாய்.
என்னிடம் சொல்லாமலே
எனக்காய் காத்திருக்கிறாய்..
அருகிலிருக்கும்போதேல்லாம்
எதுவும் பேசாமல் கிளம்பிசெல்லுகையில்
குழப்பிவிட்டு போகிறாய்..
இன்னும் கூட உணர முடியவில்லை..
உன்னையும் காதலையும்.