Tuesday, March 10, 2009

இரவு பகலை உன் விடியலாக்கி
எனது உலகம் இயக்கினாய் இனி
காற்றுகென்ன செய்வாயென்று கேட்டேன் .
எனது மூச்சே உனது சுவாசம்
கவிதையாய் நீ சொன்னதும்
கண்கள் மூடி உன்னை நானும் சுவாசித்தேன் .
பறவையாய் நீ மாறும் போதுஎனை உன்
வானம் ஆக்குகிறாய்
சிறகை உன் விரல் தீண்டும்போது
விண்மீனாய் சுருங்கவைத்தாய்
ஒரு நத்தை கூடென எனை மாற்றி போனதேன்
அதில் கடலை ஊற்றி நீ புது வித்தை செய்ததேன்
நேற்று வரைக்கும் எனது விடியல்
உனது சிரிப்பில் விடிந்தது
அதை பார்த்து பார்த்து
பூமி கூட பூக்கும் .
இதழ்கள் மூடி இமைகள் திறந்து
கண்களால் நீ பேசினாய்
கேட்க நினைத்த அன்பையெல்லாம்
கேட்காமலே நீ தந்தாய்

காதலா மாயாமா இல்லை
தேவதை சாபமா
பிரிந்ததால் புரிந்ததா இல்லை
புரியாமலே பிரிந்ததா .

No comments:

Post a Comment