கண்மூடித் தவமாய் வாழ்வதும் வீண்
கண்மூடித் தனமாய் வாகவும் வீண்
தினசரி வாழ்வை ரசித்து வாழ்வதே மேல்.
முடிந்தவரை
எல்லோரையும் நேசி
எச்சில் தெறிக்க பேசு
நடுரோட்டில் நண்பர்களோடு அடித்து விளையாடு
உன் அழுகையை நீயே ரசி
சத்தம் போட்டு சிரி
பிடித்த பொருள் குப்பையில் கிடந்தாலும்
ஓடிப்போய் எடு
பலகாரம் வைத்து தந்த எண்ணை
படிந்த துண்டு காகிதத்தை வரி விடாமல் படி
வாயிலிருந்து
கீழே விழுந்த பொருளை துடைத்து
மீண்டும் வாயில் போடு.
பசித்தால் உரிமையோடு கேள்
பார்த்தும் பார்க்காமல் போன நண்பனை
நிறுத்தி கெட்ட வார்த்தையால் திட்டு -பின்
பகையை மறந்து கட்டிப்பிடி.
காதலிக்காக காத்திரு
காதலுக்காக காத்திருக்காதே
பிடித்த பாடல்எங்காவது கேட்டால்
அது பாடி முடியம் வரை நின்று கேள்.
உன்னை நீயே பாராட்டு
முடிந்தால் உண்மை பேசு
முடியாவிட்டால்
யோசிக்காமல் பொய்யை பேசு.
குழந்தை வயது சேட்டைகளை மீண்டும் செய்.
எப்போதும் யதார்த்தமாய் இரு .
எதற்கும் தயக்கம் காட்டாதே .
இருக்கும் வரை தான் வாழ்க்கை
இறக்கும் வரைதான் வாழ்க்கை.
Tuesday, March 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment