Monday, August 30, 2010



காதல் பெருமழையில்
தொட்டங்குச்சிக் குடை
நீட்டுகிறாய்...
பார்வையால் நெருப்பை மூட்டி
பனித்துளி வார்த்தைகளை
காதுக்குள் ஊற்றுகிறாய்..
தேகத்தை தெருவில் விட்டு
உயிரை மேகத்தில்
மிதக்க விடுகிறாய்..
என்னை வரசொல்லிவிட்டு
நீ வரமறுக்கிறாய்.
என்னிடம் சொல்லாமலே
எனக்காய் காத்திருக்கிறாய்..
அருகிலிருக்கும்போதேல்லாம்
எதுவும் பேசாமல் கிளம்பிசெல்லுகையில்
குழப்பிவிட்டு போகிறாய்..
இன்னும் கூட உணர முடியவில்லை..
உன்னையும் காதலையும்.

No comments:

Post a Comment