கூடு கட்டும் பறவைக்கெல்லாம்
மரத்தின் ஆசை புரிவதில்லை
ஊதி ஊதிப் பார்த்த போதும்
பனிப் புகைகள் எரிவதில்லை
தன் மேல் விழுந்த நிலவின் பிம்பம்
தண்ணீருக்குத் தெரிவதில்லை
வெந்நீர் ஊற்றி செடிகள் வளர்ந்தால்
பூக்கும் பூக்கள் சுடுவதில்லை
ஒரு பயணத்தை தொடங்கிட இருந்தேன்
என் பாதைகள் யாவையும்
மாற்றி வைத்தாய்.
வழித் துணையென உன்னுடன் வந்தேன்
நீயோ என் விழிகளை பறித்தாய்.
உன்னோடு பேசிய நாட்கள்
வெறும் கண்ணீரில் கரைவதில்லை
நினைவுகள் மங்கிய போதும்
மனம் கண்ணாடி அணிவதில்லை.
Tuesday, January 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment