Tuesday, January 27, 2009

கூடு கட்டும் பறவைக்கெல்லாம்
மரத்தின் ஆசை புரிவதில்லை
ஊதி ஊதிப் பார்த்த போதும்
பனிப் புகைகள் எரிவதில்லை
தன் மேல் விழுந்த நிலவின் பிம்பம்
தண்ணீருக்குத் தெரிவதில்லை
வெந்நீர் ஊற்றி செடிகள் வளர்ந்தால்
பூக்கும் பூக்கள் சுடுவதில்லை
ஒரு பயணத்தை தொடங்கிட இருந்தேன்
என் பாதைகள் யாவையும்
மாற்றி வைத்தாய்.
வழித் துணையென உன்னுடன் வந்தேன்
நீயோ என் விழிகளை பறித்தாய்.
உன்னோடு பேசிய நாட்கள்
வெறும் கண்ணீரில் கரைவதில்லை
நினைவுகள் மங்கிய போதும்
மனம் கண்ணாடி அணிவதில்லை.

No comments:

Post a Comment