Tuesday, March 10, 2009

தொடங்கும் இடமும் நீ
அடையும் முடிவும் நீ
காணும் உருவம் நீ
தேடும் கனவு நீ
நான் தேடி அலையும்
தெய்வம் நீ.
கிடைத்த உறவும் நீ
அடுத்த பிறப்பும் நீ
வாழும் உலகம் நீ
வாழ்ந்த இடமும் நீ
என் வாழ்வை வளர்த்த
தாயும் நீ.
வழிந்த கண்ணீர் நீ
அழிந்த முகவரி நீ
வானம் பூமி நீ
அதில் விழுந்த மழையும் நீ
நான் எழுதி தொலைத்த
கவிதை நீ
எனது தாகம் நீ
எனது மேகம் நீ
கடந்த காலம் நீ
கடக்கும் காலம் நீ
என்னை கொன்று சென்ற பிரிவும் நீ.
இருட்டின் வெளிச்சம் நீ
நினைவின் பிதுக்கம் நீ
மேக சேர்க்கை நீ
பூமிப் பிளவும் நீ
உயிர்ப்பிக்கும் அமுதம் நீ
உணர்பிக்கும் காற்றும் நீ
நான் சுமந்து திரியும்
உயிரும் நீ .

1 comment: